புதன், 28 டிசம்பர், 2011

Mobile பற்றிய அனைத்து விபரங்களையும் அறிய அருமையான இணைய தளம்




நம்முடைய Mobile பற்றிய விபரம் யாராவது கேட்டால் ஏதோ தெரிந்த 4 அல்லது 5 விஷயங்களை மட்டும் தான் சொல்லுவோம்.அதை பற்றிய முழுவிபரமும் நாம் சொல்ல மாட்டோம்.இன்று உங்களுக்கு ஒரு இணைய தளத்தினை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.இதில் உங்கள் Mobile பற்றி முழுவிபரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.மேலும் இந்த தளத்தில்

01. ஒரு Mobile வாங்க  போகும் முன், இந்த விலைக்குல் இந்த இந்த வசதிகளைக்கொண்ட (Camera, GPS, Bluetooth, Radio, Dual SIM , 3.5G Network) Mobile எது என்று கேட்டால் (தேடினால்),  உடனே அந்த விலைக்குல் ஏற்ற , அந்த வசதியை கொண்ட,  Mobile களை பட்டியல் இட்டு காட்டும்.

02.  ஒரு Mobile உடன் இன்னும் ஒரு Mobile ஐ ஒப்பிட்டு பார்க்க முடியும்.

03.  ஒரு Mobile  ஐ  360 பாகையிலும் சுற்றி பர்வையிட முடியும்.

04.  நீங்கள் தேடும் Mobile தற்போது சந்தையில் இருக்கிறதா இல்லியா
என்றும் தெரிந்து கொள்ள முடியும்.

05.  நாம் தேடும் Mobile இன் சந்தை பெறுமதியையும் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் பல வசதிள் இந்த இணையத்தளத்தில் காணப்படுகிறது.

தள முகவரி http://www.gsmarena.com

உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி வையுங்கள்.

வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்



Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.

Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.


Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy).


Ctrl+d: ஓர் எழுத்தின் (font) வடிவை மாற்றி அமைக்க.


Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.


Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. 

மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.

Ctrl+g: ஓரிடம் செல்ல.


Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட(Replace).


Ctrl+i:எழுத்து / சொல்லை சாய்வாக அமைக்க .


Ctrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக (Justify) அமைக்க.


Ctrl+k: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த.


Ctrl+l: பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க.


Ctrl+m: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட.


Ctrl+n: புதிய டாகுமெண்ட் உருவாக்க.


Ctrl+o: டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க.


Ctrl+p: டாகுமெண்ட் ஒன்றை அச்சடிக்க


Ctrl+q: பத்தி அமைப்பை நீக்க.


Ctrl+r: பத்தியினை வலது புறம் சீராக, நேராக அமைக்க.


Ctrl+s: தானாக, டாகுமெண்ட் பதியப்பட (Auto save).


Ctrl+t: பத்தியில் இடைப்பட்ட இடத்தில் இடைவெளி (Hanging) அமைக்க.


Ctrl+u: டெக்ஸ்ட்டில் அடிக்கோடிட.


Ctrl+v: தேர்ந்தெடுத்ததை ஒட்டிட.


Ctrl+w: டாகுமெண்ட்டை மூடிட.


Ctrl+x: தேர்ந்தெடுத்ததை அழிக்க, நீக்கிட.


Ctrl+y: இறுதியாக மேற்கொண்ட செயல் பாட்டினை மீண்டும் மேற்கொள்ள.


Ctrl+z: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டிற்கு மாறாக மேற்கொள்ள.


ஞாயிறு, 25 டிசம்பர், 2011

பணம் மரத்தில்தான் காய்க்கிறது!


“பணம் என்ன மரத்திலா காய்க்குது?” – இந்த கேள்வி உங்கள் காதில் விழாத நாளே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. யாராவது இனி இப்படி உங்களை கேட்டால், தயங்காமல் பதில் சொல்லுங்கள். “பணம் மரத்தில்தான் காய்க்கிறது!”

என்னென்னவோ தொழில் நடத்தி நஷ்டமடைந்தவர்கள் ஆயிரம் பேரை உங்களுக்கு தெரியலாம். நிச்சய லாபம் கொடுக்கக்கூடிய ஒரு தொழில் இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மரம் வளர்ப்பு!

மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென நிச்சயம் கொட்டும்.

முதலில் இரண்டு கதைகளை பார்த்துவிடுவோம்.

முதலில் அசலூர் கதை.

பீகாரின் பகல்பூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமம் தர்காரா. பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், குறைந்தது பத்து மாமரங்களை நடுவது இங்கே வழக்கம். இவ்வழக்கம் எப்போதிலிருந்து பின்பற்றப்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் பரம்பரை பரம்பரையாக ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சரி, இந்த சடங்கினால் வேறு என்ன பிரயோசனம்? சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது என்கிற உலகளாவிய பயன்பாட்டை எல்லாம் விட்டு விடுவோம்.

இக்கிராமத்தில் வசிக்கும் சுபாஷ்சிங் ஒரு சிறுவிவசாயி. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மகள் பிறந்தாள். நிகாகுமாரி என்று பெயர் வைத்து, ஊர் வழக்கப்படி பத்து மாங்கன்றுகளை நட்டு வளர்த்தார்.

இந்த இருபது ஆண்டுகளில் மகள் திருமணத்துக்கு செலவு செய்யவேண்டுமே என்றெல்லாம் சுபாஷ்சிங் என்றுமே கவலைப்பட்டதில்லை. சமீபத்தில் நிகாகுமாரிக்கு ஜாம் ஜாமென்று திருமணம் நடந்தது. மாப்பிள்ளை அரசுப்பள்ளியில் வாத்தியார்.

“என் மகள் வளரும்போது அவளோடு சேர்ந்து, அவளுக்காக நான் நட்ட மாமரங்களும் வளர்ந்தது. மூன்றே ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்தது. பழங்களை சந்தையில் விற்கத் தொடங்கினேன். இத்தனை ஆண்டுகளாக இதில் கிடைத்த வருமானம், எனது மகளின் திருமணச் செலவினை விட பன்மடங்கு அதிகம்” என்று பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சொன்னார் சுபாஷ்சிங்.

‘லாஜிக்’ ஆக யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய பொருளாதார ரகசியம், இந்த மரம் நடும் சடங்கில் அடங்கியிருக்கிறது. கிராமப் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் மரம் நடும் சடங்கு, நிச்சயமாக வெறும் மூடநம்பிக்கையல்ல. பெரும் பொருளாதார நிபுணர்களுக்கு கூட தோன்றாத ‘ஐடியா’வினை, இக்கிராமத்து மக்கள் காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள்.

மாமரங்களால் இவ்வளவு பெரிய பொருளாதார அனுகூலங்களை அடையமுடியுமா என்று உங்களுக்கு சந்தேகம் தோன்றலாம். ஒரு நடுத்தர அளவிலான மாந்தோப்பு, ஒவ்வொரு வருடமும் ரூபாய் ரெண்டு லட்சம் வரை வருமானத்தை வழங்குகிறது. மாந்தோப்பில் கிடைக்கும் வருமானத்தை, அப்படியே சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் சேமிக்கிறார்கள்.

மாமரங்கள் தரும் வருமானத்தால் முன்பெல்லாம் கோதுமை, நெல் விதைத்து வந்த விவசாயிகளும் கூட இப்போது தோப்புகள் அமைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களாம். ஊரிலேயே வயதானவர் சத்ருகன் பிரசாத் சிங். 86 வயதாகும் இவர், அந்தக் காலத்தில் கடுமையான விவசாயி. 25 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். தன் நிலம் முழுக்க மாமரம் மற்றும் லிச்சி மரங்களை நட்டு இன்று நிம்மதியாக இருக்கிறார்.

தர்காரா இப்போது பசுமைச்சேலை உடுத்தி, மாஞ்சோலையாக பூத்துக் குலுங்குகிறது. நம்புங்கள். தர்காரா கிராமத்தில் மாமரம் மற்றும் லிச்சி மரங்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு லட்சம். இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாமரங்கள் நன்கு வளர்ந்து வருடா வருடம் நல்ல மகசூலை தந்து வருகிறது.

அடுத்தது நம்மூர் கதை.

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்துக்கு அருகில் சேந்தன்குடி என்றொரு கிராமம். இந்த ஊரில் தங்கசாமி என்றொரு விவசாயி. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக விவசாயத்தால் நஷ்டப்பட்டுப்போய் மனம் கலங்கி நின்றார். ஊரில் கடுமையான வறட்சி. சொத்தை விற்று, கடன்களை அடைத்து ஏதாவது ஓட்டலில் ‘சர்வர்’ வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தார்.

அன்று, அகில இந்திய வானொலியில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தார். ‘மரப்பயிரும் பணப்பயிரே!’ என்கிற தலைப்பில் பேராசிரியர் ஒருவரின் உரை. அதுதான் தங்கசாமி வாழ்வின் திருப்புமுனை. சொத்தை விற்கும் முடிவினை மூட்டை கட்டி வைத்தார்.

நூறு தேக்கு மரங்களை வாங்கி தனது நிலத்தில் நட்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவை வளர்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்பது அவரது திட்டம். ஒரே ஆண்டிலேயே தங்கசாமி நட்ட மரங்கள் இருபது அடி வளர்ந்து அவரை உற்சாகப்படுத்தியது. இதே உற்சாகத்திலேயே நூறு மாங்கன்றுகளை நட்டார். அப்படியே நூறு முந்திரி, நூறு புளியங்கன்று என்று நட்டுக்கொண்டே சென்றார்.

வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், நெல்லி, புளி, மகோகனி என்று சுமார் நூறு வகையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களுட, இருபத்தைந்து ஏக்கர் அளவுக்கு விரிந்த காட்டுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் தங்கசாமி. இந்த காட்டினுடைய மதிப்பு பல கோடி. ஓட்டலில் சர்வர் வேலைக்குச் செல்ல திட்டமிட்டவர், இன்று கோட்டீஸ்வரர்.

சேந்தன்குடியில் போய் ‘மரம்’ தங்கசாமி என்று விசாரித்துப் பாருங்கள். இவரது காட்டுக்கு வழி சொல்லுவார்கள். தனது காட்டில் மட்டுமல்ல. நாடெங்கும் மரம் வளர்க்க ஊக்குவிப்பதுதான் தங்கசாமியின் லட்சியம். திருமணங்களுக்கு சென்றால் ‘மொய்’ எழுதமாட்டார். மரகன்றுதான் பரிசளிப்பார். புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க பயணித்து, எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் மரம் நட்டிருக்கிறார்.

இன்று உலகெங்கும் இருந்து, தங்கசாமி வளர்த்த காடை பார்க்க ஆராய்ச்சியாளர்கள் குவிகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள் வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் பாடமாக போதிக்கப்படுகின்றன.

இரண்டு கதைகளையும் வாசித்து, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அடையத் தேவையில்லை. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மார்பிள், கிரானைட் போன்ற உலோகங்கள், கனிமங்கள் மாதிரி மரங்களும் கூட ‘காஸ்ட்லி’ ஆனவைதான்.

உதாரணத்துக்கு செஞ்சந்தன மரம். அணு உலை கதிர்வீச்சினை தடுக்கும் சக்தி இம்மரவகைகளுக்கு உண்டு. ஒரு டன் மூன்றரை முதல் நாலு லட்ச ரூபாய் வரைக்கும் சந்தை மதிப்பில் போகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டது இம்மரம்.

குறைவான ஆள் தேவை, உற்பத்தி மற்றும் பராமரிப்புச் செலவும் மிகக்குறைவு என்பதால் ‘மரம் வளர்ப்பு’ நல்ல லாபகரமான தொழிலாக விளங்குகிறது. முழுநேரமும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டிய தேவையுமில்லை. நிறைய பேர் ‘பார்ட் டைம்’ மற்றும் ‘வீக் எண்ட்’ தொழிலாகவும் கூட இத்தொழிலை செய்து வருகிறார்கள்.

குமிழ், முள்ளில்லா மூங்கில், மலைவேம்பு, சந்தனம் ஆகிய மரங்கள், இத்தொழிலுக்கு நன்கு தோதுப்படும் மரங்கள். குறிப்பாக குமிழ்மரம். தேக்கு வகையைச் சார்ந்த இம்மரம் வெகுவேகமாக வளரும். ஒரே ஒரு மரம், எட்டு ஆண்டுகளில் ஒரு டன் அளவுக்கு வளர்ந்து நிற்கும். இன்றைய தேதியில் விலை எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு சுமார் ஆயிரத்து இருநூறு மரங்களை வளர்க்க முடியுமென்றால், லாபத்தை நீங்களே கால்குலேட்டர் கொண்டு கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

“மரக்கன்றுகளின் விலை இருபதிலிருந்து நூறு ரூபாய்தான். நம் கண்ணெதிரிலேயே அவை வளர்ந்து, பலன் தர ஆரம்பிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு விலையே இல்லை” என்கிறார் மர ஆர்வலரான நடேசன்.

அந்தகாலத்து அண்ணா பல்கலைக்கழக பொறியாளரான நடேசனுக்கு இப்போது வயது எழுபது. சொந்தமாக ஒரு தொழிற்சாலை அம்பத்தூரில் வைத்திருந்தார். தொழில் நிமித்தம் 1980ஆம் ஆண்டு ஜப்பானுக்கு சென்றிருந்தபோது ‘க்ரீன் எர்த்’ என்றொரு கண்காட்சியை கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் இவருக்கு வாய்த்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நிலப்பரப்பில் நாற்பது சதவிகித காடுகளை கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு முப்பதாண்டுகளிலேயே வெகுவேகமாக அந்நிலை மாறி பதினான்கு சதவிகித காடுகளையே கொண்டிருப்பதாகவும் ஒரு செய்தியை அங்கே அறிந்தார். நாட்டின் பசுமையை மனிதர்கள் சுயநலத்துக்காக அழித்துக் கொண்டிருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி தோன்றியது. ஊர் திரும்பியதும் கும்மிடிப்பூண்டியில் 18 ஏக்கர், காரனோடையில் 6 ஏக்கர் நிலம் வாங்கி மரங்கள் வளர்க்க ஆரம்பித்தார்.

இன்று தனது ஓய்வுக்காலத்தை தான் வளர்த்த மரங்களோடு மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் இவர் வளர்த்த மரங்களின் எண்ணிக்கை மட்டுமே இருபதாயிரம். தொழிலதிபரான இவர் ‘மரம் வளர்ப்பும் நல்ல லாபகரமான தொழிலே’ என்று பொருளாதாரரீதியான பார்வையில் சுட்டிக் காட்டுகிறார்.

“மரம் வளர்ப்பினை சுற்றுச்சூழலைக் காக்கவோ, உலகவெப்பமயமாதலை குறைக்கவோ மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை. வங்கியில் வைப்புநிதி போட்டு வைப்பது மாதிரி கூட வளர்க்கலாம். கனியாகவோ, பூவாகவோ, விறகாகவோ, மருந்தாகவோ ஏதோ ஒரு வகையில் நீங்கள் வளர்த்த மரம் உங்களுக்கு நிறைய திருப்பித் தரும். தரிசு நிலம் கையகலம் கூட இல்லை என்கிற நிலை வரவேண்டும். சும்மா கிடக்கும் நிலங்களில் எல்லாம் சவுக்கு, மூங்கில் என்று கிடைத்த மரங்களை நட்டுவைத்தால், காலப்போக்கில் அவை நிறைய வருமானத்தை அள்ளித்தரும்” என்கிறார் நடேசன்.

மரம் வளர்ப்பு என்பது புதிய விஷயமில்லை. பாரம்பரியமாக நம் முன்னோர் செய்து வந்ததுதான். என்ன, இடையில் நகரமய சொகுசில் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். மீண்டும் அதைத்தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டு வருகிறது. ஆளுக்கு ஒரு மரமாவது நட்டு, நாமும்தான் இந்த மகிழ்ச்சியை அனுபவித்துப் பார்ப்போமே?


மரம் வளர்ப்பு : சில மகிழ்ச்சித் துளிகள்!

• மதுரை மாவட்டத்தில் இருக்கும் கிராமம் மாத்தூர். இந்த ஊர் கண்மாய் கரைகளில் பலன் தரும் புளிய மரங்களை பொதுமக்கள் நட்டு, பலன் பெற்று வருகிறார்கள். விறகுக்காக கண்மாய் மாதிரி பகுதிகளில் கருவேல மரங்களை வளர்ப்பது வழக்கம். இவை நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சிவிடுவதால் மாத்தூர் மக்கள் இவற்றை அழித்து, கரையோரங்களில் புளியமரங்களை நட்டு வருகிறார்கள். ஆண்டு தோறும் இம்மரங்களில் புளியம்பழம் பறிக்க ஏலம் விடப்படுகிறது. ஏலத்தொகையை அரசு கஜானாவுக்கு வருவாயாகவும் கொடுத்து அசத்தி வருகிறார்கள் மாத்தூர் மக்கள்.

• சோளங்குருணி என்கிற கிராமமும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த ஊரின் ஊடே செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் பொதுமக்களால் புளிய மரங்கள் ஏராளமாக நட்டு வளர்க்கப்பட்டது. இம்மரங்கள் நெடுஞ்சாலைத் துறைக்கே சொந்தமென்றாலும், பொதுமக்கள் முன்வந்து வளர்த்தவை என்பதால், இதில் கிடைக்கும் வருமானத்தை கிராமவளர்ச்சித் திட்டங்களுக்கே நெடுஞ்சாலைத்துறை தந்துவிடுகிறது.

• திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் ஒரு சர்வதேச அமைப்பு - The International Small Group Tree Planting (TIST) – ஒரு லட்சம் மரங்களை நட திட்டமிட்டிருக்கிறது. இம்மரங்கள் முழுக்க அப்பகுதி சிறு விவசாயிகளின் நிலங்களில் நடப்படும். விவசாயிகளின் வழக்கமான பணிகளோடு, மரம் வளர்ப்பையும் சேர்த்து செய்வதின் மூலம் கூடுதல் வருவாயை அவர்கள் ஈட்ட முடியும் என்ற நோக்கத்தில் இந்த மரங்கள் நடப்படுகின்றன.



என்னென்ன மரங்களை வளர்க்கலாம்?

மணற்பாங்கான கரையோர நிலங்களில் வளர்க்கக் கூடியவை : பின்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டு வாதுமை.
சிறுமரங்கள் : புங்கன், சரக்கொன்றை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, ரெட் கார்டியா, செண்பகம், கறிவேப்பிலை

மரச்சாலை மரங்கள் : வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி
பழவகை மரங்கள் : நாவல், நெல்லிக்காய், பலாமரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளா, சபோட்டா, இலந்தை, சீதாப்பழம், மாதுளை, அரநெல்லி, கரம்போலா, பிம்ப்ளீ

பறவைகளை வசீகரிக்கும் மரங்கள் : கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, நெய்பழம், கம்பளி, இலுப்பை, ஸபோட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி

அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள் : பூந்திக்கொட்டை, பூமருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆஃப் தி ஃபாரெஸ்ட், மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, கேஸியா ஜாவா, ஆத்துப் பூவரசு, நெருப்புக் கொன்றை

*அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.


எப்போது நடலாம்?

மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது. பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வையிலான மழைக்காலம் இதற்கு ஏற்றது. தாழ்வான பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால், இம்மாதங்கள் ஏற்றவை. மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.


மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?

வனத்துறை அலுவலகங்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் விசாரித்து வாங்கலாம். வனத்துறை தோட்டங்களில் குறைந்த விலையில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும். இல்லையேல் நர்சரிகளில் நீங்கள் விரும்பும் மரக்கன்றுகளை வாங்கி நடலாம். மரக்கன்றுகளை வாங்கும் இடத்திலேயே, அவற்றை பராமரிப்பது, உரமிடுவது குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.


நகரங்களில் மரம் வளர்ப்பு!

“நாங்கள் மண் தரையே கண்ணில் படாத கான்க்ரீட் காடுகளில் வசிக்கிறோம். நாங்கள் என்ன மரத்தை வளர்ப்பது?” என்று நகரவாசிகள் கேட்கலாம். உங்கள் வீட்டுக்கு முன்பு கார், பைக் விட கொஞ்சமேனும் இடம் நிச்சயம் இருக்குமில்லையா? அது போதும். கொத்தனார் ஒருவரை கூப்பிட்டு 2க்கு 2 அளவில் குழிதோண்டி, முருங்கை வளர்க்க ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தித்தர சொல்லுங்கள். பெரிய பராமரிப்பு தேவையின்றி அதுபாட்டுக்கு வளரும் மரம் முருங்கை மரம். தெரிந்தவர்களிடம் ஒரு கிளை வாங்கி வந்து நட்டு வைத்தால், அது பாட்டுக்கு வளர்ந்து நிற்கும். இரண்டு வருடங்களில் ஐநூறு, அறுநூறு காய்கள் காய்த்துத் தொங்கும். முருங்கை கீரையும் போனஸ்.

இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்


புதிய மற்றும் பழைய இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் சுலபமாக பார்க்க கீழே உள்ள தளங்கள் உதவுகின்றன . இவற்றை பலருக்கு தெரிந்திருக்காலாம். 


  இந்த தளத்தில் ஏகப்பட்ட இந்தி திரைப்படங்கள் உள்ளன. இந்த தளத்தில்   
 ஆங்கில திரைப்படங்கள் இந்தி மொழியில் மாற்றப்பட்ட திரைப்படங்களையும்  
  பார்க்கலாம். 


    இந்த தளத்தில் இந்தி ,தமிழ்., தெலுங்கு , மாரட்டி , கன்னடம் ,மலையாளம் , 
    பஞ்சாபி என பல இந்திய மொழி திரைப்படங்கள் உள்ளன . 

    இந்த தளத்தில் இந்திய மொழி திரைப்படங்களுடன் ஆங்கில  
    திரைப்படங்களையும் பார்க்கலாம் .

    இந்த தளத்தில் இந்திய திரைப்படங்களுடன் ஆங்கில மற்றும் இத்தாலிய  
    திரைப்படங்கள் பார்க்கலாம் . 

     இந்தி மொழி புதிய திரைப்படங்கள் பார்க்க உதவும் . 

    இந்திய புதிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த தளத்தில் 
    நிறைந்துள்ளன 

  புத்தம் புதிய இந்திய திரைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன . 

    இந்திய புதிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த தளத்தில் 
    நிறைந்துள்ளன 

    இந்தி சிறந்த புதிய திரைப்படாங்களை பார்க்க உதவுகிறது .

      புத்தம் புதிய இந்திய திரைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன .

 

ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்





நட்சத்திரங்கள் மொத்தம் 27.இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்..

உதாரணமாக 27 நட்சத்திரங்களின் பட்டியல் கொடுத்துள்ளேன்.



அசுவனி,

பரணி,
கிருத்திகை,
ரோகிணி,
மிருகசீர்ஷம்,
திருவாதிரை,
புனர்பூசம் ,
பூசம்,
ஆயில்யம்,
மகம்,
பூரம்,
உத்தரம்,
அஸ்தம்,
சித்திரை,
ஸ்வாதி (சுவாதி),
விசாகம்,
அனுஷம்,
கேட்டை,
மூலம்,
பூராடம்,
உத்திராடம்,
திருவோணம்,
அவிட்டம்,
சதயம்,
பூரட்டாதி,
உத்திரட்டாதி,

ரேவதி


இவற்றில் உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 3,5,7,12,21,25 வது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வந்தால் பிரிவு,மனவருத்தம்,விவாகரத்து ,குறை ஆயுள்,குழந்தை இன்மை,அசுபம் போன்ற பலன்கள் ஏற்படலாம்.
இவை தவிர்த்த நட்சத்திரங்களில் முக்கியமான பொருத்தங்களான...,
தினபொருத்தம்,கணபொருத்தம்,யோனிபொருத்தம்,ராசி பொருத்தம்,ரஜ்ஜு பொருத்தம் வர வேண்டும்..இவை இல்லாதவை பொருத்தம் இல்லை..பத்து பொருத்தங்களில் இந்த ஐந்து பொருத்தங்கள் மிக அவசியம்.
தினப்பொருத்தம்;
பெண் நட்சத்திரம் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வர,2,4,6,8,9,11,13,15,18,20,24,26 வது நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு..இதன் பலன் செல்வாக்குடன் வாழ்தல்,தம்பதிகள் ஒற்றுமை.
கணப்பொருத்தம்;
செல்வ வளத்துடன் வாழ்தல் குறிக்கும் பொருத்தம்,இருவர் நட்சத்திரமும் ராட்ஷ கணமாக இருத்தல் கூடாது..தேவகணம்,மனுஷ கணம்,ராட்ஷகணம் என பிரிக்கப்பட்டிருக்கும்..தேவ கணம்-தேவ கணம்,மனுஷ கணம்-மனுஷ கணம் பொருத்தம் உண்டு.

மஹேந்திரபொருத்தம்;
பெண் நட்சத்திரம் தொடங்கி,எண்ணும்போது ஆன் நட்சத்திரம் 1,4,7,10,13,16,19,22,25 வது நட்சத்திரமாக வரக்கூடாது..இதன் பலன் குழந்தை பாக்யம்.ஆயுள் விருத்தி.
யோனி பொருத்தம்;
பெண்ணின் யோனிக்கும் ஆணின் உறுப்புக்கும் உள்ள அளவை பற்றி,நட்சத்திரவாரியாக சொல்லப்படும் கணக்கு என்பார்கள்...அதாவது தாம்பத்தியம் செக்ஸ் திருப்தியை பற்றி சொல்லக்கூடிய முக்கியமான பொருத்தம்...நமீதா மாதிரி இருக்குற பொண்ணுக்கு,சோம்பேறியை கட்டி வெச்சா என்னாகும்..?
அதே போல மர்ம உறுப்புகளின் பலத்தை பத்தியும் சொல்ற முக்கியமான இடம் இதுதான்...
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஆடு,குதிரை,சிங்கம் என யோனி பிரிக்கப்பட்டிருக்கும்...அதற்கு பகையான யோனியும் சொல்லப்பட்டிருக்கும்..பகை யோனி நட்சத்திரங்களை சேர்க்க கூடாது...விடிய விடிய சம்போகம் செய்யும் ஆணுக்கும்,சம்போகமே பிடிக்காத பெண்ணுக்கு அதாவது அளவோடு இருக்குற பொண்ணுக்கும் கலயாணம் பண்ணி வெச்சா சொல்லாம கொள்ளாம அந்த பொண்ணு ஓடிப்போயி போலீஸ் ஸ்டேசன்ல நின்னு என் கணவர் வரதட்சணை கொடுமை பண்றார்னு சம்பந்தம் இல்லாம கேஸ் கொடுக்கும்...
அதிக ஆசை உள்ள பெண்ணுக்கு,பெண்ணை தொட்டவுடன் மேட்டர் அவுட் ஆகிடுற ஆணை கட்டி வெச்சா...அவள் மூடு அடங்காமல் ,தவிப்பாள்.நல்ல குடும்ப பெண்ணா இருந்தா ஆன்மீகம் வழியில் திரும்பிடுவாள்..மண்ணு திங்கிற உடம்புன்னு நினைச்சிட்டா..கதை கந்தல்..பக்கத்து வீட்டுக்காரனுக்கு அடிச்சது அதிர்ஷ்டம்.
ராசிபொருத்தம்;
பெண் ராசிக்கு புருஷன் ராசி 2 வது ராசியானால் மரணம்,3 வது ராசி துக்கம்,4 வது ஏழ்மை,5 வது ராசி வைதவ்யம்.6 வது ராசி புத்திர நாசம்,7 வது உத்தமம்.மாங்கல்யம்,ஆயுள் விருத்தி,8 வது அதிக புத்திர லாபம்,9 வது செளமங்கல்யம்,10 வது ஐஸ்வர்யம்,11 வது சுகம்,12 வது ஆயுள் விருத்தி,

ரஜ்ஜு பொருத்தம்;
மாங்கல்ய பொருத்தம் என்னும் இருவரது ஆயுளை பற்றி சொல்லும் முக்கியமான பொருத்தம்.27 நட்சத்திரங்களையும் சிரசு ரஜ்ஜு,பாத ரஜ்ஜு,தொடை ரஜ்ஜு,உதர ரஜ்ஜு,என பிரித்திருப்பார்கள்..கணவன்,மனைவி நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தால் கண்டம்,நஷ்டம்,விபத்து என சொல்கிறது..இரண்டு நட்சத்திரங்களும் வேறு வேறு ரஜ்ஜுவில் இருந்தால் பொருத்தம் உண்டு.


ஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்




உலக சர்வதேச மொழியான ஆங்கிலத்தை கற்றுகொள்ள பல இணையதளங்கள் உள்ளன அவற்றில் இருந்து நான்கு பயனுள்ள தளங்களை தொகுத்துள்ளேன்.

1.  FUN EASY ENGLISH

அடிப்படை ஆங்கில அறிவுக்கான அதிக விளக்கத்தை இந்த தளத்தில் பெறலாம் . சொல் உச்சரிப்பு மற்றும் இலக்கணம் என்பன பெரும்பாலும் வீடியோ ஆடியோ வசதியுடன் கற்று கொள்ள முடியும்.




http://funeasyenglish.com/

2.GO 4 ENGLISH .COM

இந்த தளம் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு சொந்தமானது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கான ஆங்கில அறிவை இந்த தளம் வழங்குகிறது.



http://go4english.co.uk/


3. LEARN ENGLISH FREE ONLINE

ஆங்கில சொற்களுக்கான விளக்கத்தை படங்கள் மற்றும் வேடிக்கையாக கற்று தருகிறது இந்த தளம்.


http://www.learnenglish.de/

4.EXAM ENGLISH

பிரபல சர்வதேச ஆங்கில தேர்வுகளை உள்ளடக்கிய ஓர் பரீட்சை வழிகாட்டி தளமாகும் . இங்கு சென்று உங்கள் ஆங்கில அறிவினை பரீட்சித்து கொள்ள முடியும்.

http://www.examenglish.com/

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

DTCP அப்ரூவல் என்றால் என்ன? நிலம் வாங்கப் போறீங்களா


நிலத்தில் லே-அவுட் (Layout) போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல் (Conversion), அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றை மேற்கொள்வதற்கு நகர ஊரமைப்பு இயக்கம் (Directorate of Town and Country Planning - DTCP) அனுமதி தேவைப்படும். இது சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) அங்கீகாரத்திலிருந்து வேறுபடுகிறது. சி.எம்.டி.ஏ. (CDMA) உடைய அதிகார வரம்பு என்பது சென்னை மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகள் வரை வரும்.

டீ.டி.சி.பி. உடைய அதிகார வரம்பு, மீதமுள்ள தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகள் வரை நீடிக்கிறது. எனவே டீ.டி.சி.பி. அப்ரூவலுக்கு இங்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது. அதிலும், லே-அவுட் நிலங்களுக்கு டீ.டி.சி.பி. அனுமதியே மிக மிக முக்கியமானது. அப்ரூவல் வாங்க வேண்டிய பகுதி பத்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால், அந்த நிலம் எந்த மாவட்டத்தில் உள்ளதோ அந்த மாவட்டத்தின் டீ.டி.சி.பி. அலுவலகத்தின் அனுமதி தேவை. இது தவிர, லே-அவுட் பகுதி பத்து ஏக்கருக்கு மேல் இருந்தால் சென்னையில் உள்ள டீ.டி.சி.பி. தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.


இதில் லே-அவுட் ஒரு கிராமப் பகுதியில் இருந்தால், அந்தக் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்று அவர்களிடம் நமது லே-அவுட் பிளானை சமர்பிக்க வேண்டும். அவர்கள் அதை சரிபார்த்து விட்டு, மாவட்ட டீ.டி.சி.பி. அலுவலகத்துக்கு அந்த பிளானை அனுப்பி வைப்பார்கள். டீ.டி.சி.பி. அதிகாரிகள், லே-அவுட் பிளானை பல்வேறு கட்டங்களில் ஆராய்ந்த பிறகு அதற்கு அனுமதி கொடுப்பார்கள். சில சமயங்களில் அவர்களே ஒரு பிளானையும் தயாரித்துக் கொடுக்கலாம்.


அதில் அவர்கள் சாலை, பூங்கா, பொது இடம் என்று பிரித்து இருப்பார்கள். அதைத்தான் லே-அவுட் புரமோட்டர் அல்லது உரிமையாளர் பின்பற்ற வேண்டும். பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், அதில் வேறு எந்த மாற்றமும் செய்யக் கூடாது. அந்த பிளானில் உள்ள படியே பிளாட் (Plot) களை விற்கவோ விளம்பரம் செய்யவோ வேண்டும்.


24 செண்டுக்கு குறைவான நிலப்பகுதிக்கு கிராமப் பஞ்சாயத்தின் அனுமதியே போதுமானது (1 செண்ட்=435.6 சதுர அடிகள்). அந்த 24 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியை தனியாக வாங்கவோ அதில் கட்டடம் கட்டவோ பஞ்சாயத்து அனுமதி தேவைப்படும். அந்த 24 செண்ட் அளவுக்கு மேற்பட்ட நிலப்பகுதிக்கு லே-அவுட் அப்ரூவல் மட்டுமல்லாது, வேறு எந்த விதமான திட்டங்களுக்கும் அனுமதி வழங்க கிராமப் பஞ்சாயத்துக்கு அதிகாரமே கிடையாது. அவை அனைத்துமே டீ.டி.சி.பி. உடைய கட்டுப் பாட்டின் கீழ் வரும். எனவே, பஞ்சாயத்து அனுமதியை மட்டுமே நம்பி ஒரு நிலப்பகுதியை வாங்குவது நல்ல விசயம் அல்ல.


விவசாய நிலத்தை மட்டுமல்லாது, உற்பத்தி/தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை குடியிருப்பு பகுதிகளாக மாற்றவும் டீ.டி.சி.பி. அனுமதி தேவை. சான்றாக, தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்ற திட்டமிட்டால் அதற்கு, நிலத்தின் வரைப்படம் (TOPO Plan), நிலப்பத்திரங்கள் அனைத்தையும் சேர்த்து டீ.டி.சி.பி. அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதுதவிர, குடியிருப்பு பகுதியாக மாற்றிய பிறகு, அந்த நிலத்தை எந்த விசயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிவித்து விட வேண்டும்.


டீ.டி.சி.பி. அலுவலகம், சம்பந்தப்பட்ட நிலத்தை ஆராய்வார்கள். பிறகு, இந்த நிலத்தைப் பற்றிய தகவல்களையும், அதற்கு ஆட்சேபணைகளையும் கேட்டறிய 2 நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடுவார்கள். எந்த ஆட்சேபணையும் வரவில்லை என்றால், உடனடியாக Zone Conversion னுக்கு அனுமதி கொடுப்பார்கள்.


நான்கு மாடிக்கு மேல் கட்டப்படுகின்ற கட்டிடங்கள் அனைத்துமே அடுக்குமாடிக் கட்டிடங்களாகக் கருதப்படுகின்றன. இதில் கட்டப்படுகின்ற கட்டிடத்தின் அருகே உள்ள சாலையின் அகலம், நிலத்தின் அகலம், ஃபுளோர் சைஸ் இண்டெக்ஸ் (Floor size index), கட்டிடத்தின் அகலம் போன்ற எண்ணற்ற நடைமுறைகள் உள்ளன.


இவற்றில் ஒன்று ஒத்துவரவில்லை என்றாலும் அடுக்குமாடிக் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கப்படாது. சான்றாக, 10 மாடிக் கட்டிடம் என்றால், அருகே உள்ள சாலையின் அகலம் குறைந்தபட்சம் 80 அடியும், கட்டிடம் கட்டப்படும் நிலத்தின் அகலம் 24.4 மீட்டரும் இருக்க வேண்டும். இதில் சிறிது குறைந்தாலும் பிளானுக்கு அனுமதி மறுக்கப்படும்.


நன்றி: புதிய தலைமுறை வார இதழ்

ஞாயிறு, 20 நவம்பர், 2011

நமக்கு தேவையானதை Google இல் எளிதாக தேடுவது எப்படி



Google நாம் அதிகமாக பயன்படுத்தும் தேடுதல்  இயந்திரம். இதில் நாம் தேடும்போது நமக்கு தேவை இல்லாத பல விசயங்களும் வர வாய்ப்பு உள்ளது.  இதை தவிர்த்து எப்படி நமக்கு தேவையானதை மட்டும் தேடுவது எப்படி என பார்ப்போம் வாருங்கள்.




நான் கொடுக்கும் டிப்ஸ்களை பயன்படுத்திப் பாருங்கள், பின்னர் சொல்லுங்கள்.

1.Use Of '+' sign:

இந்த + Sign ஐ பயன்படுத்துவதால் நாம் ஒரு சொற்றொடரை தரும்போது அதில் எந்த வார்த்தைக்கு முன் + ஐ தருகிறீர்களோ அது கண்டிப்பாக உங்கள் தேடுதலில் கிடைக்கும்.
உதாரணம்: Reviews of +DELL and ACER 

இதில் உங்களுக்கு ரிசல்ட் Reviews அல்லது ACER உள்ளதோ இல்லையோ கண்டிப்பாக DELL இடம்பெறும்.

2. Use Of '-' sign:


இது மேலே உள்ள +signக்கு எதிரான வேலையை செய்யும். அதாவது - sign உள்ள வார்த்தை உங்கள் தேடலில் இடம்பெறாது.

3. Use Of '~' sign:

இந்த sign ஐ ஒரு வார்த்தைக்கு முன் சேர்த்தால் அதன் இணை பொருட்சொல்லையும்(synonyms) தரும்.

4. Search a particular site:

ஒரு குறிப்பிட்ட தளத்தில் இருந்து தகவலை தேட விரும்பினால் இந்த முறையை பயன்படுத்தலாம்.

Search: site:www.xyz.com abc

உதாரணம்: site:baleprabu.blogspot.com/ computer tricks


5. Define a word:

ஒரு சொல்லின் பொருள்(Definition) அறிய இந்த முறையை பயன்படுத்தவும்.

Search: define:abc

உதாரணம் : Search: define:Computer


6. Search for exact phrase:

ஒரு சொற்றொடரை தேட இது உதவும்.

Search: "contact us"

7. Using the wild card '*':

இது ஒரு சொல்லின் முழுதான வார்த்தை தெரியவில்லை என்றால் பயன்படுத்தவும்.

Search: friend*

இப்போது உங்களுக்கு friend, friends, friendship போன்ற வார்த்தைகளை தேடிதாரும்.

8. Using the '?' sign:

ஒரு வார்த்தைக்கு முழு spelling தெரியாத போது பயன்படுத்தலாம்.

Search: :fri??d

இப்போது உங்களுக்கு மேலே உள்ள spelling உடன் தொடர்பு உடைய வார்த்தைகளை காட்டும்.

9. Use of boolean operators :

AND,OR,NOT இவைதான் boolean operators. இவற்றை இரண்டு வார்த்தைகளுக்கு இடையில் சேர்ப்பதால் அந்த இரண்டில் ஒன்றை மட்டும் ஒரு link இல் தரும்.

உதாரணம் :
Search: swim OR float

இங்கு AND,OR,NOT போன்றவற்றை Capital letter ஆக மட்டுமே கொடுக்க வேண்டும்.

10. ஒரே மாதிரியான பதிவை வெவ்வேறு தளங்களில் தேடுவது எப்படி? 

இதற்கு குறிப்பிட்ட தலைப்பிற்கு முன்னே Related என்று கொடுக்கவும். இதனால் நாம் தொடர்புடைய பதிவுகளை எளிதில் பெற முடியும். 

உதாரணம்: 



11. File Format களில் தேடுவது எப்படி?

இது நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும்.நீங்கள் தேடும் பொருளின் பின் அந்த Format extension கொடுக்க வேண்டும். அதாவது pdf file என்றால், .pdf என்று கொடுக்கலாம்.

உதாரணம்:

Eg: Solar Power.pdf

12. ஒரு இடத்தில் நேரம், வெப்பத்தை அறிவது எப்படி?

Time, Temperature போன்ற வார்த்தைகளை குறிப்பிட்ட நகரத்தின் பெயருக்கு பின்னால் அல்லது முன்னால் சேர்க்கவும்.

உதாரணம்:

Time Chennai , Chennai Weather

13. கல்வி குறித்து தேடுவது எப்படி?

கல்வி குறித்து நாம் அதிகம் தேட வாய்ப்புகள் உள்ளது.அப்போது தேடும் பொருளுக்கு பின் .edu என்று சேர்க்கவும்.

14.கூகிள் கணக்கு பண்ணுமா?

நீங்கள் நினைப்பது போல கூகிள் பொண்ணையோ அல்லது ஆணையோ கணக்கு பண்ணாது, நிஜமாகவே கணக்கு பண்ணும் கூகிள்.

அதாவது எளிய கணக்குகள் கூகிள் மூலம் போடலாம்.

(24*9)(39+68)(45-21) 

15. குறிப்பிட்ட நகரத்தில், குறிப்பிட்ட தொழிலை தேடுவது எப்படி?

இது மிக முக்கியமானது. உதாரணமாக எனக்கு திருச்சி நகரில் சிறந்த கணினி Service Centre தேட வேண்டும் என்றால் அதை எவ்வாறு தேட வேண்டும் என்றால்,

Eg:Computer Service in Trichy Or Computer Service In 620002

அதாவது,

Type: “[business name or type], [city or zip/postal code]”

Image From: http://funpho.com



தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது ?




நாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்று எப்படி      தெரிஞ்சுகொள்வது   கடைகாரர்   எல்லா       போன்களும்

 தரமானதுதான்னு    சொல்லுவார்   உங்கள் நோக்கியா போனின் தரத்தை
      
எளிதாக கண்டுபிடிக்கலாம் .கடைகாரரிடம் போனை வாங்கி *#06#  டயல் செய்ங்க. சில எண்கள்  வரும்  

இதை "IMEI" நம்பர் என்று சொல்லுவாங்க. (International Mobile Equipment Identity) (கேள்விபட்டுருபீங்க).பிறகு அந்த எண்களில் ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கங்களை பாருங்கள்.
                                     

 Phone serial no. x x x x x x ? ? z z z z z z z
(XXXXXX - Approval code,  ZZZZZZZ - Serial number)

ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம் 

0     2  அல்லது  2    0 - என்றால் அந்த போன் தயாரான நாடு  EMIRATES  ,தரம் : மோசம்

0    8  அல்லது   8    0 - என்றால் அந்த போன் தயாரான நாடு   GERMANY , தரம் : சுமார்

0    1  அல்லது  1   0  என்றால் அந்த போன் தயாரான நாடு  FINLAND  ,தரம் : நல்ல தரம்

0    4    என்றால் அந்த போன் தயாரான நாடு  CHINA . தரம் : நல்ல தரம்
( CHINA என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய software வேறு நாட்டில் தாயரிக்கபட்டது.)


0     3    என்றால் அந்த போன் தயாரான நாடு  KOREA . தரம் : நல்ல தரம்

0     5    என்றால் அந்த போன் தயாரான நாடு  BRAZIL . தரம் :  சுமார்


0     0   என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் தயாரானது.  தரம் : மிக மிக நல்ல தரம், மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.
 
 
1      3      என்றால் அந்த போன் தயாரான நாடு  AZERBAIJAN  ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.

இனிமேல்  NOKIA MOBILE  வாங்க சென்றால் இந்த எண்களை மறக்காமல் எழுதிக்கொண்டு போங்க. 



செல்போன் தொலைந்து போனாலோ, திருட்டுப் போனாலோ அதை முறைப்படி 'பிளாக்' செய்யவோ, மீட்கவோ வழியிருக்கிறது. இது பற்றிச் சிலர் அறிந்திருப்பார்கள் என்றாலும், முழுமையாகப் பார்க்கலாம்- ஒவ்வொரு செல்போனுக்கு ஒரு வரிசை எண் உள்ளது. ஐ. எம். ஈ. ஐ. எண் என்ற அது, ஒவ்வொரு செல்போனுக்கும் தனித்தன்மையானது ஆகும்.

உங்கள் செல்போனின் ஐ. எம். ஈ. ஐ. என்னை அறிய, *#06 # என்ற 'கீ'க்களை அழுத்துங்கள். உடனே செல்போன் திரையில் ஒரு 15 இலக்க எண் தோன்றும். இந்த ஐ. எம். ஈ. ஐ. எண், ஒவ்வொரு செல்போனுக்கும் வேறுபடும். இந்த எண்ணக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் செல்போன் தொலைந்துப் போனாலோ, திருட்டுப் போனாலோ உங்களுக்கு செல்போன் சேவையை அளிக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இந்த எண்ணைக் கொடுங்கள். அவர்கள் உடனே குறிப்பிட்ட செல்போனை 'பிளாக்' செய்வார்கள். செல்போனை யாராவது திருடி அதன் 'சிம்கார்டை' மாற்றினாலும் அவர்களால் முற்றிலுமாக செல்போனை பயன்ப்படுத்த முடியாமல் போகும்.