ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

வெப்மாஸ்டர் டூல் அறிமுகம் - கூகுள்


தேடுபொறிகளில் நமது தளம் முன்னணியில் வருவதற்கான சில வழிகளை பற்றி தேடுபொறி ரகசியங்கள் என்ற தொடரில் பார்த்தோம். நாளுக்கு நாள் தனது தேடல் படிமுறைகளை (Search Algorithms) மேம்படுத்திக் கொண்டு இருக்கும் கூகிள் தளம், வெப்மாஸ்டர்ஸ் எனப்படும் வலைத்தள உரிமையாளர்களுக்கு பயன்படும் வகையில் பல உதவிகளையும் செய்து வருகிறது. அதில் ஒன்று நமது தளங்களை ஆய்வு செய்வதற்கான கருவி, வெப்மாஸ்டர் டூல். இது கூகிளின் தளமாகும்.

வெப்மாஸ்டர்  டூல் மூலம் கூகிள் தேடுபொறியின் பார்வையில் நமது தளம் எவ்வாறு உள்ளது? என்பதை பார்க்கலாம். இதன் மூலம்  நமது தளத்தை மேம்படுத்தி, கூகுள் உள்பட பல தேடுபொறிகளில் முன்னணியில் வரவைக்கலாம். இதனை பயன்படுத்தும் முறைகள் பற்றி  இந்த தொடரில் விரிவாக பார்ப்போம்.

வலைத்தளத்தை சேர்த்தல்:


உங்கள் தளத்தை பற்றி அறிந்துக் கொள்ள முதலில் உங்கள் தளத்தை சேர்க்க வேண்டும். மொபைல் தளங்கள் உள்பட அதிகபட்சமாக ஆயிரம் தளங்கள் வரை உங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அதனுடைய உரிமையாளர் நீங்கள் தான் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

1. முதலில் https://www.google.com/webmasters/tools/ என்ற முகவரிக்கு சென்று உங்கள் கூகுள் கணக்கு மூலம் உள்நுழையுங்கள்.

2. அங்கு Add a Site என்பதை க்ளிக் செய்து, உங்கள் தள முகவரியை கொடுத்து, Continue என்பதை க்ளிக் செய்யுங்கள். [Sub Domain பயன்படுத்துபவர்கள் அதனை மட்டும் கொடுக்கவும்]

பொதுவாக ப்ளாக்கர் தளங்களை உங்கள் கூகுள் கணக்கு மூலம், அந்த தளத்திற்கு நீங்கள் தான் உரிமையாளர் என்பதை தானாகவே உறுதி செய்துவிடும். பழைய ப்ளாக்கர் தளங்களையும், மற்ற தளங்களையும் உறுதி செய்ய சிலவற்றை செய்ய வேண்டும். கூகிள் அனாலிடிக்ஸ் பயன்படுத்தும் ப்ளாக்கர் அல்லாத தளங்களையும் தானாகவே உறுதி செய்துவிடும்.

3. Continue பட்டனை க்ளிக் செய்த பிறகு Verify Ownership என்ற பக்கத்திற்கு செல்லும். அங்கு உங்கள் தளத்தை உறுதி செய்வதற்கு மூன்று வழிகள் இருக்கும்.அதில் "Add a meta tag to your site's home page" என்பதை க்ளிக் செய்தால் உங்கள் தளத்திற்கான பிரத்யேக Meta Code-ஐ காட்டும். அதனை காப்பி செய்துக் கொள்ளுங்கள்.

4. பிறகு தனியாக ஒரு Window அல்லது Tab-ஐ திறந்து, Blogger Dashboard=> Template=> Edit Template Html பக்கத்திற்கு செல்லுங்கள். [மாற்றம் செய்வதற்கு முன் உங்கள் டெம்ப்ளேட்டை Backup எடுத்துக் கொள்ளுங்கள்.]

5. அங்கு <head>என்ற Code-ஐ தேடி அதற்கு கீழே நீங்கள் காப்பி செய்த Meta Code-ஐ Paste செய்யுங்கள்.

6. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யுங்கள்.

7. பிறகு மீண்டும் ஏற்கனவே திறந்து வைத்துள்ள Verify Ownership பக்கத்திற்கு சென்று, அங்கு Verify என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

உங்கள் தளம் உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கும். உறுதி செய்த பிறகு உங்கள் தளத்திற்கான Dashboard பக்கத்தை காட்டும். புதிதாய் சேர்த்த தளங்களுக்கு விவரங்களை காட்ட சிறிது நாள்  எடுக்கும். அதுவரை காத்திருக்க வேண்டும். ஏற்கனவே உங்கள் ப்ளாக்கில் கூகிள் அனலிடிக்ஸ் நிறுவியிருந்தால் உடனே காட்டும்.



Dashboard-ல் இடது புறம் Sidebar-ல் Site Configuration, Your Site on the Web, +1 Metrics, Diagnostics, Labs என்று ஐந்து தேர்வுகள் இருக்கும். இறைவன் நாடினால் இவைகளை பற்றி ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.

புதன், 24 ஆகஸ்ட், 2011

சுகர் பேசன்ட்ஸ் (சர்க்கரை நோயாளிகளே) கண்களை கவனியுங்கள்...


உலக அளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது. இது இன்னும் பன்மடங்கு அதிகரிக்கக்கூடும். இன்று ஒரு இந்தியரின் சராசரி ஆயுள்காலம் 65 வயது. ஆனால் சர்க்கரை நோய் இந்தியர்களை 30 முதல் 35 வயதிலேயே தாக்கத் தொடங்கி விடுகிறது.

சர்க்கரை நோய் மற்ற நாடுகளிலுள்ளவர்களைக் காட்டிலும் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியர்களுக்கு வருகிறது. எனவே இந்நோய் இந்திய நாட்டிற்கே பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தக்கூடியதாகும்.

சர்க்கரை நோய் உடலில் அனைத்து உறுப்புகளை யும் பாதிக்கும். எனினும் இருதயம், சிறுநீரகம் மற்றும் கண்களில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த மூன்று உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பு அந்த மனிதரின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். கண்ணில் சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்பு `டயாபடிக் ரெட்டினோபதி` என்று அழைக்கப்படுகிறது.

சர்க்கரை நோய் கண்களை பாதிப்பது எப்படி?

 

உடலில் சர்க்கரையின் அளவு மிக அதிகமானால் கண்ணில் உள்ள ரத்த நாளங்களிலிருந்து நீர் விழித்திரையினுள் கசியும். அதனால் நாளடைவில் விழித்திரையில் வீக்கம் ஏற்பட்டு பார்வைக் குறைவு ஏற்படும். இதை ஆரம்பக் கட்டத்திலேயே சரி செய்யாவிடில் விழித்திரையில் தழும்பு ஏற்பட்டு நிரந்தர பார்வை இழப்பு தோன்றும். சிலருக்கு சர்க்கரை நோயின் விளைவாக கண்ணினுள் ரத்தக்கசிவு ஏற்பட்டு பார்வை பறிபோகும்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்று தெரியவந்தால் உடனடியாக கண்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருந்தால் கண்ணில் பாதிப்பு மிக விரைவாக ஏற்படும். சர்க்கரை நோயாளி ஒருவருக்கு சர்க்கரையின் அளவு நீண்டகாலமாக சீரான கட்டுப்பாட்டில் இருந்தாலும் அவருக்கும் பார்வை குறைபாடு ஏற்படக்கூடும் என்பது சர்க்கரை நோயின் விசித்திரமான அம்சமாகும்.

டயாபடிக் ரெட்டினோபதியின் அறிகுறிகள் என்ன?

 

இந்நோய் இருப்பவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் எந்தவிதமான அறிகுறியும் தெரியாது. சிறிது காலம் சென்ற பிறகு பார்வைக்குறைவு ஏற்படும். பார்க்கும் பொருட்கள் எல்லாம் வளைந்தது போல் காணப்படும். சிகிச்சை செய்யாமல் போனால் நிரந்தரப் பார்வைக் குறைபாடு உருவாகக்கூடும்.

டயாபடிக் ரெட்டினோபதியால் கண்களில் ஏற்படும் பாதிப்பை எவ்வாறு கண்டறிய முடியும்?

 

சர்க்கரை நோய் ஒருவருக்கு உள்ளது என்று தெரிந்தவுடனே அவர், கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். விழித்திரையை ஆப்தல்மோஸ்கோப் (Ophthalmoscope) என்ற கருவியின் உதவியுடன் மிகத் துல்லியமாக பரிசோதனை செய்ய முடியும். விழித்திரையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை புகைப்படங்கள் (Fundus Photograph) மூலமும் பதிவு செய்ய இயலும். விழித்திரையில் ஏற்படும் நீர்க்கசிவையும், சோதனை மூலம் கண்டறியலாம். மேலும் விழித்திரையிலுள்ள சகல விதமான பாதிப்புகளையும் `ஓசிடி' (Oct) என்ற கருவியின் மூலம் கண்டறியலாம். இது கண்ணில் செய்யக்கூடிய ஒருவித ஸ்கேன் ஆகும்.


டயாபடிக் ரெட்டினோபதியை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் பார்வை பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். விழித்திரையில் லேசர் உதவியுடன் நீர்க்கசிவை குறைக்க முடியும். தற்போது லேசர் தவிர புதிய மருந்துகளை கண்களுக்குள் நேரடியாகவே ஊசி மூலம் செலுத்தியும் இந்த நோயை குணப்படுத்த இயலும். பாதிப்பு அதிகமாக இருந்தால் அறுவைச் சிகிச்சை செய்ய நேரிடும்.

டயாபடிக் ரெட்டினோபதி வராமல் எப்படி தவிர்க்கலாம்?

 

சர்க்கரை நோய் உள்ள அனைவரும் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வப்போது சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்துகளை தவறாது உட்கொள்ள வேண்டும். சர்க்கரை உள்ளது என்று கண்டறியப்பட்ட உடனே கண்பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.


இதை தவிர்த்து வருடத்திற்கு ஒரு முறையாவது கண் பரிசோதனை செய்து கண் சிகிச்சை நிபுணரின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். சர்க்கரை நோய் என்பது கட்டுக்குள் இருக்கும் நோயே தவிர நிரந்தரமாக குணமாகாது. எனவே சர்க்கரை நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் (அவ்வப்போது) கண் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை செய்து வர வேண்டும்.

பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தும் நோய்களில் மிகவும் கவனிக்கத் தகுந்தது "க்ளோக்கோமா''. இது கண்நீர் அழுத்த நோயாகும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே மிகக் குறைவாகவே உள்ளது. அதனால் இந்த நோய் மிக மோசமான பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்துகிறது.

க்ளோக்கோமா பாதிப்பு எப்படி ஏற்படுகிறது?

 

எல்லோருக்கும் கண்ணில் இயல்பாகவே அழுத்தம் (பிரஷர்) உண்டு. இந்த அழுத்தம் 6-21 மி.மி. இருக்க வேண்டும். கண்ணில் `ஆக்வஸ்யூமர்' என்ற திரவம் உள்ளது. இது ஓரிடத்தில் உற்பத்தி ஆகி கண்ணினுள் பாய்ந்து பரவி, மற்றொரு பகுதி வழியாக வெளியேறும். இந்த `ஆக்வஸ்யூமர்` திரவம்தான் கண் அழுத்தத்தை சமச்சீராக்குகிறது. இந்த திரவத்தின் உற்பத்தி அதிகமானாலோ, அது பாய்ந்து வெளியேறும் பகுதிகளில் அடைப்பு அல்லது பழுது ஏற்பட்டாலோ கண்ணில் அழுத்தம் அதிகமாகும். இதுவே க்ளோக்கோமா ஏற்படுவதற்கான காரணமாகும்.


கண்களில் அழுத்தம் அதிகமாகும்போது அது கண்ணிலுள்ள பார்வை நரம்பை பாதிக்கிறது. பார்வை நரம்பு பாதிப்பதானால் பக்க பார்வை (Side Vision) குறைபாடு ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் சிகிச்சை ஆரம்பித்தாலும் முழுமையாக இதனை சரி செய்ய முடியாது. இந்த நோய் ஆரம்ப கட்டத்தில் எந்தவித அறிகுறியையும் ஏற்படுத்தாது. நோய் முற்றிய பிறகே அவருக்கு பார்வைக்குறைபாடு தோன்றும்.

யாருக்கு, எத்தனை வயதில் இந்த நோய் தோன்றும்?

 

யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கும் கண்களில் அடிபட்டு காயம் ஏற்பட்டவர்களுக்கும், `ஸ்டெய்ராய்டு' வகை மருந்துகளை உட்கொள்பவர் களுக்கும் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நோய் பரம்பரையாகவும் வரும் தன்மை கொண்டது.


இதில் `ஓபன் ஆங்கிள் க்ளோக்கோமா', `குளோஸ்டு ஆங்கிள் க்ளோக்கோமா', `செகண்ட்ரி க்ளோக்கோமா' என்று மூன்று வகை உண்டு.


முதல்வகை க்ளோக்கோமா, நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரலாம். இந்த பாதிப்பு கொண்டவருக்கு `ஆக்வஸ்யூமர்' திரவம் கண்ணுள் பாய்ந்து வெளியேறும் பாதை திறந்தே காணப்படும். ஆனால் அது செயலிழந்து இருக்கும். இந்த நோய் மிக மெதுவாகவே அதன் பாதிப்பை உணர்த்தும்.

இரண்டாவது வகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்ணினுள் `ஆக்வஸ்யூமர்' பாய்ந்து வெளியேறும் பாதையில் அடைப்பு ஏற்பட்டிருக்கும். இது பெண்களுக்கு அதிகமாக காணப்படுகிறது. பெண்களின் குறுகிய கண் அமைப்பே இதற்கு காரணம். கண்ணீர் வெளியேறும் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் கண்ணில் அழுத்தம் மிகவேகமாக உயரும். எனவே இந்தவகை பாதிப்பு கொண்டவர்களுக்கு கண்ணில் வலி, தலைவலி, வாந்தி ஏற்படும். லேசர் செய்து அப்பாதையில் உள்ள அடைப்பை நீக்க வேண்டும். கண்ணில் அடிபட்டால் ஸ்டெய்ராய்டு வகை மருந்துகளை உட்கொண்டால் `செகண்ட்ரி க்ளோக்கோமா' தோன்றலாம்.


க்ளோக்கோமா வகை நோய்களை வரும்முன் காப்பதே நல்லது. இந்த நோய் உள்ளவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் அறிகுறி எதுவும் தெரியாது. சிலருக்கு தலைவலி, இரவு நேரங்களில் பார்வைக்குறைபாடு ஏற்படும். ஆரம்பத்திலே கண்டுபிடித்து சிகிச்சை பெறுவதே ஆரோக்கியத்திற்கு ஏற்றது.


- விளக்கம்: டாக்டர் அருள்மொழிவர்மன், M.S, D.O.,
                        கண்சிகிச்சை நிபுணர்.

"தி வே டு ஹேப்பினெஸ்'





வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?

இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் "தி வே டு ஹேப்பினெஸ்' இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

"தி வே டு ஹேப்பினஸ்' புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். "இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்' என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.

"சந்தோஷத்தின் வழி'யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:

1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.

2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.

4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

6. "அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்' என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.

7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!

10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.

11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.

12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.

13. திருடாதீர்கள்.

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.

15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.

16. "சும்மா இருப்பதே சுகம்' என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!

18. அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்ள் அவர்களை நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது, அள்ளி எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள்.

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

ஒரே நேரத்தில் பல இணைய பக்கங்களை பார்க்க உதவும் இணையம்.

எல்லோருக்கும் பயன்தரும் தளம் தொடர்பான பதிவு. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு அல்லது மூன்று இணைய பக்கங்களை பார்வையிடவும் செயலாற்றவும் உதவுகிறது eyeooo.com  என்ற இணையசேவை.

இது முற்றிலும் இலவசமாக இந்த இணையசேவையினை வழங்குகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில்பல இணையபக்கங்களை பார்வையிட முடிவதுடன் இணையபக்கங்களின் தன்மையினை ஒப்பிடு செய்ய முடிகிறது.


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 இந்த தளத்தில் பல பக்கங்களை பார்வையிட உங்களுக்கு பொருத்தமான மாதிரியினை தெரிவுசெய்து.(மேலே படத்தில் உள்ளது ) கீழே உள்ள பெட்டியில் அதன் முகவரிகளை கொடுத்து go என்பதை கிளிக் செய்வதன் மூலம் பல இணைய பக்கங்களை ஒரே நேரத்தில் பார்வையிட முடியும்; 

அத்துடன் ஒவ்வொரு இணைய பக்கத்தினையும் கீழே,மேலே, பக்கவாட்டில் என நகர்த்தி முழுமையாக பார்வையிட முடியும்.

தள முகவரி  EYEOOO.COM


என்.ஆர்.ஐ.கள் இந்தியாவில் வீட்டுக் கடன் வாங்குவது எப்படி?


வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றிருக்கும் என்.ஆர்.ஐ.கள் அனைவரின் முதல் ஆசையாக இருப்பது, சொந்த ஊரில் வசதியான அழகிய வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பதாக இருக்கிறது. இதற்காக அவர்கள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் அங்கே இருந்தபடியே இந்தியாவில் எளிதாக சொத்து வாங்க முடியும்.

யாரெல்லாம் என்.ஆர்.ஐ.?

1973-ம் ஆண்டின் அந்நிய செலாவணி கட்டுப்பாடு சட்டப்படி, வேலை வாய்ப்பு, வணிகம் அல்லது வேறு காரணங்களால் வெளிநாட்டில் நீண்ட காலமாக தங்கியிருப்பவர்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களாக (என்.ஆர்.ஐ.கள்) கருதப்படுகிறார்கள்.

இவர்கள் தவிர, இந்திய அரசு ஊழியர்கள், மத்திய அரசு அமைப்புகளில் வெளிநாடுகளில் பணிக்கு அமர்த்தப்படுபவர்கள், சர்வதேச நிதியம், உலக வங்கி, உலக சுகாதார அமைப்பு உள்ளிட்டவைகளில் பணியாற்றுபவர்கள், மத்திய - மாநில - பொதுத்துறை நிறுவனங்களுக்காக வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள், இந்திய வம்சாவளியினரும் வீட்டுக் கடனை பெறலாம்!

எதுக்கெல்லாம் கடன் உதவி?

* மனை வாங்க..!
* அடுக்குமாடி குடியிருப்பு வாங்க..!
* வீடு கட்ட.. .!
* வீட்டை அழகுபடுத்த .!
* வீட்டை விரிவாக்கம் செய்ய...!
* இன்னொரு மாடி (தளம்) கட்ட..!

இப்படி பல்வேறு விஷயங்களுக்காக கடன் வாங்கிக் கொள்ளலாம்.

தற்போது இந்தியாவிலுள்ள பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு தாரளமாக வீட்டுக் கடன் கொடுத்து வருகின்றன. எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்ஸிஸ் பேங்க், கனரா, ஐ.டி.பி..ஐ, பஞ்சாப் நேஷனல் பேங்க், எல்.ஐ.சி. ஹவுஸிங் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை கடன் அளிக்கின்றன.

வெளிநாட்டு வாழ் இந்தியரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் யார் வேண்டுமானாலும் இந்தியாவிலுள்ள வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தை வாங்கிக் கொள்ளலாம். கடன் வழங்கும் நிறுவனத்தில் பொது அதிகார ஆவண (Authorised Power of Attorney) படிவம் ஒன்றை தருவார்கள். இது கடன் பெறுபவர் தனக்கு பதில், கடன் வாங்குவது தொடர்பான அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்திட, வேறு ஒரு நபருக்கு அதிகாரம் கொடுப்பதாகும். இதனை கடன் வாங்க உள்ள என்.ஆர்.ஐ. நிரப்பி, தான் பணிபுரியும் நாட்டிலுள்ள தூதரகம் அல்லது துணை தூதரகத்தில் கொடுத்து அங்குள்ள அதிகாரியின் கையெழுத்து மற்றும் அலுவலக முத்திரையை வாங்கி இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் கடன் வாங்குபவர் இந்தியா வர வேண்டிய அவசிமியமில்லை. 'பவர்' பெறும் நபரே கடன் வாங்குபவர் சார்பில் அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொள்ளலாம்.


 
எவ்வளவு கடன் கிடைக்கும்?


பொதுவாக மனை என்றால் அதன் மதிப்பில் சுமார் 60-70 சதவிகிதம், வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு என்கிறபட்சத்தில் அதன் மதிப்பில் 80-85% தொகை கடனாக கிடைக்கும். மீதியை கடன் வாங்குபவர் தன் கையிலிருந்து மார்ஜின் மணியாக போட வேண்டும். இது தவிர, கடன் வாங்குபவரின் திரும்பச் செலுத்தும் திறனும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுதான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.

என்.ஆர்.ஐ.-ன் சம்பளம் குறைவாக இருக்கிறது. ஆனால், அதிக தொகை கடனாக தேவைப்படுகிறது என்றால் வருமானம் ஈட்டும் இன்னொருவருடன் இணைந்தும் கடன் வாங்க முடியும். அந்த இன்னொருவர் என்.ஆர்.ஐ. ஆக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இந்தியாவிலுள்ள துணைவராக (கணவன்/மனைவி) அல்லது மகனாக இருக்கலாம். சொத்துப் பத்திரத்தை அடமானம் வைப்பதன் பேரில்தான் கடன் வழங்கப்படுகிறது. இது தவிர, இரு தனி நபர்களின் உத்தரவாதம் (கேரண்டி) தேவைப்படும்.

கடன் வாங்குபவரின் மாத ஊதியம், வயது, கல்வித் தகுதி, பணி அனுபவம், துணைவரின் வருமானம், சொத்து, வேலை தொடரும் ஆண்டுகள், ரொக்க இருப்பு, இந்தியா திரும்பிய பின் வேலைவாய்ப்பு, சேமிப்பு உள்ளிட்டவைகளை அலசி ஆராய்ந்துதான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.

ஒருவரின் மாதச் சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். அவரின் மாதச் சேமிப்பு 18 ஆயிரம் ரூபாய். இதே சம்பளம் கொண்ட இன்னொருவரின் மாதச் சேமிப்பு பத்தாயிரம் ரூபாய் என்றால் யார் அதிகமாக சேமிக்கிறார்களோ அவருக்குதான் எளிதில் கடன் கிடைக்கும்.

வட்டி விகிதம் இந்தியர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு உள்ளதை விட ஓரிரு சதவிகிதம் அதிகமாக இருக்கும்.

தேவையான ஆவணங்கள்:


* பணிக்கான ஒப்பந்தம்
* மாத சம்பள ரசீது
* வெளிநாட்டில் பணிபுரிவதற்கான அனுமதி
* கடன் வாங்குபவருக்கு அவரின் நிறுவனம் வழங்கிய அடையாள      அட்டையின் நகல்
* விசா முத்திரைப் பதிக்கப்பட்ட பாஸ்போர்ட்
* கட்ட இருக்கும் மற்றும் வாங்க உள்ள வீட்டின் அப்ரூவல் பிளான்
* மனை கிரயப் பத்திரம் (அசல் மற்றும் நகல்)
* தாய் பத்திர நகல்
* வில்லங்கச் சான்றிதழ் - குறைந்தது 13 ஆண்டுகளுக்கு
* கட்டுமானச் செலவு மதிப்பீடு அறிக்கை
* வீட்டின் மதிப்பீடு அறிக்கை

கடனை எப்படி திரும்ப கட்டுவது?

கடன் பெற்ற வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனங்களில் இந்தியாவிலுள்ள உறவினர்கள் அல்லது நண்பர்கள் நேரில் ரொக்கப்பணமாக அல்லது காசோலை மூலம் செலுத்தலாம். அல்லது என்.இ.ஆர். அல்லது எஃப்.சி.என்.ஆர், என்.ஆர்.ஓ.கணக்கு மூலம் கட்டலாம்.

வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கடனை அடைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். என்.ஆர்.ஐ-க்கு பதில் இந்தியாவிலுள்ள அவரின் மிகவும் நெருங்கிய உறவினர்களை மட்டுமே கடனை அடைக்க சில வங்கிகள் அனுமதிக்கின்றன.

முக்கிய அம்சங்கள்..!

> கடன் வாங்குபவரின் வயது வரம்பு: 21-55 ஆண்டுகள்

> கடன் தொகை: ரூ.25,000 முதல் ரூ. 3கோடி வரை

> மார்ஜின் மணி : 15-20%

> கடன் தொகை: மாதச் சம்பளத்தைப் போல் சுமார் 20-30 மடங்கு கடனை திரும்பச் செலுத்தும் காலம்: 5-15 ஆண்டுகள் (சில வங்கிகள் 20 ஆண்டுகள் கூட அனுமதிக்கின்றன)

> வட்டி விகிதம் : மாறுபடும் வட்டி சுமார் 11-14%, நிலையான வட்டி 14-16%
பரிசீலணை கட்டணம்: 1-2% (கடன் தொகையில்)

எக்ஸ்டிரா டிப்ஸ்

* ஆன்லைன் விளம்பரங்கள், புரோக்கர்கள் வார்த்தைகளை மட்டும் நம்ப்பி சொத்து வாங்கும் முடிவை எடுக்காதீர்கள்.

* முடிந்த வரையில் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை மனை அல்லது சொத்தை நேரில் பார்த்து வரச் சொல்லுங்கள்.

****
courtesy.vikatan

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

ஒரே இணைய பக்கத்தில் உலகில் உள்ள அனைத்து நாளிதழ்களும்

 வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ரேடியோ,தொலைகாட்சி, கணினி இப்படி பல்வேறு சாதனங்கள் செய்திகளை அறிய உதவினாலும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கும் பழக்கம் இன்னும் அனைவரிடமும் மிகுந்தே உள்ளது. காரணம் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரு செய்தியை பற்றிய அணைத்து தகவல்களையும் இந்த செய்திதாள்களின்  மூலம் அறிய முடிகிறது என்பதால் மக்கள் இன்னும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கிறோம். உலகில் எக்கச்சக்கமான நாளிதழ்கள் உள்ளது. நம் இந்திய நாட்டை எடுத்து கொள்ளுங்கள் இதில் நூற்றுகணக்கான நாளிதழ்கள் உள்ளது.

இவைகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காணமுடியுமா? உலகில் எதனை நாளிதழ்கள் உள்ளது என்பதை ஒரே பகுதியில் காண முடியுமா என்றால் முடியும் என்பதே என் பதில். உலகில் உள்ள அனைத்து நாளிதல்களையும் ஒரே இணைய பக்கத்தில் காண முடியும்.



இந்த இணைய Newspaper Map பக்கத்தில் சென்றால் மேப் போன்று காணப்படும். வரைபடத்தில் இருந்து அந்தந்த நாடுகளில் உள்ள நாளிதழ்களை நாம் அறிந்து அந்த தளங்களுக்கு சென்று ஆன்லைனில் அந்த சித்திகளை இலவசமாக படித்து கொள்ளலாம். 

இந்த தலத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆன்லைன் தளங்கள் உள்ளன. இந்த தலத்தில் மேலும் ஒரு பயனுள்ள வசதி இதில் செய்திதாள்களின் மொழிகளை ஒரே கிளிக்கில் கன்வெர்ட் செய்யும் வசதியும் உள்ளது.மற்றும் மொழிவாரியாகவும், இடம் வாரியாகவும் பிரித்து தேடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது இது கண்டிப்பாக அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ப்ளூ புக் - ஆங்கில இலக்கணம் கற்கலாமா!



Grammar Book என்ற பெயரில் இணைய தளம் ஒன்று http://www.grammarbook.com/english_rules.asp என்ற முகவரியில் இயங்குகிறது.

முறையாக ஆங்கில இலக்கணம் கற்க பல வழிகள் இந்த தளத்தில் தரப்பட்டுள்ளன. இந்த தளத்தில் Grammar Rules, Punctuation Rules, Capitalization Rules, Commonly Confused Words, மற்றும் Rules for Writing Numbers எனப் பல பிரிவுகள் தரப்படுகின்றன. ஒவ்வொரு தலைப்பின் கீழும் பல எடுத்துக்காட்டுகள் தரப்பட்டு விளக்கப்படுகின்றன. ஓரமாகத் தரப்பட்டுள்ள மெனுவில் English Usage Videos, Free Online Quizzes, மற்றும் the Grammar Blog என்ற பிரிவுகள் காணப்படுகின்றன. இதில் உள்ள Grammar Blogல் பலவகையான இலக்கண விளக்கங் கள் தரப்பட்டுள்ளன.

வீடியோ பிரிவில், சிறு சிறு பாடங்கள் தரப்பட்டுள்ளன. டெக்ஸ்ட் எடுத்துக்காட்டுக்களைக் காட்டிலும் இவற்றில் தரப்பட்டுள்ள விளக்கங்கள் நாம் கற்றுக் கொள்வதனை எளிதாக்குகின்றன. மொத்தம் 68 வீடியோ கிளிப்கள் உள்ளன. ஆங்கில மொழி ஆக்கத்திற்கான விதிமுறைகளை இவை விளக்குவது எளிதாக உள்ளது.

ஆங்கில மொழியை நன்கு கற்றுப் பயன்படுத்த திட்டமிடுவோருக்கும், கற்றவர்கள் தங்களின் சந்தேகங்களைப் போக்குவதற்கும் இது ஓர் அருமையான தளம்.


வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

IP எண்ணை சுலபமாக கண்டறிய சிறந்த 10 தளங்கள்

உலகில் கோடிக்கணக்கான கம்ப்யுட்டர் இருந்தாலும் ஒவ்வொரு கணினிக்கும் ஒரு குறியீடு எண் கொடுத்து பிரித்து வைத்துள்ளனர். இதுவே ஐ.பி எண்(Internet Protocol) என அழைக்கபடுகிறது. இந்த ஐ.பி. எண்ணை வைத்து ஒரு கணினியின் இருப்பிடத்தையும், தகவல் பரிமாற்றங்களையும் சரியாக கூற முடியும். இது மட்டுமில்லாமல் ஹாக்கர்கள் கணினியின் ஐபி எண்ணை அடிப்படையாக கொண்டே கணினியை முடக்குகின்றனர்.  (ஆகையால் உங்கள் கணினியின் ஐபி எண்ணை யாரிடமும் பகிந்து கொள்ள வேண்டாம்). கணினியின் ஐ.பி. எண்  சுலபமாக கண்டறிய சிறந்த 10 தளங்கள் கீழே கொடுத்துள்ளேன். இந்த ஐபி எண்களை நாம் ஆப்லைனிலும் பார்த்து கொள்ளலாம்.
இந்த தளங்களில் ஐபி எண் மட்டுமில்லாமல் உங்களின் இணைய வழங்குனர், மற்றும் நீங்கள் இருக்கும் இருப்பிடம் போன்ற சில விவரங்களும் வரும்.

1) What is my ip address
இந்த தளம் ஐபி எண்ணை கண்டறிய மிகவும் பிரபலமான தளமாகும். இந்த தளத்தில் ஐபி எண் மட்டுமின்றி சில கூடுதல் விவரங்களும் வருகிறது. அது மட்டுமில்லாமல் நம் கணினியின் இருப்பிடத்தை கூகுள் மேப் உதவியுடன் காட்டுகிறது.

2) What Is My IP
இந்த தளத்தில் நம்முடைய கணினியின் ஐ.பி எண் மட்டும் காட்டுகிறது. மற்றும் ஐ.பி. எண்ணை பற்றிய ஒரு விரிவான கட்டுரையை ஆங்கிலத்தில் அங்கு கொடுத்துள்ளனர். தேவை படுபவர்கள் அதை படித்து ஐபி எண்ணை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

3) IP Address World
இந்த தளத்தில் உங்கள் ஐபி எண்ணோடு உங்கள் இணையதளத்தில் இணைக்க விட்ஜெட் கோடிங்கையும் கொடுத்துள்ளனர்.

4) My IP Address
மற்ற தளங்களில் நாம் சென்றாலே நம் கணினியின் ஐ.பி. எண்ணை கண்டறிந்து விடலாம். ஆனால் இந்த தளத்தில் சில குறியீடு எண்ணை கொடுத்து Show my IP என்ற பட்டனை அழுத்தினால் தான் நம்முடைய கணினியின் ஐ.பி. எண்ணை கண்டறிய முடியும்.

5) IP Chicken
இந்த தளத்தில் நம் கணினியின் ஐ.பி. எண் மட்டுமின்றி நம்முடைய கணினியில் உபயோகிக்கும் உலவிகள் அதன் வெர்சன்கள் போன்ற விவரங்களும் வருகிறது.

6) 123My IP
இந்த தளத்தில் நமது ஐபி எண்ணும் மற்றும் அதனோடு நாம் உபயோகிக்கும் கணினியின் இயங்கு தளம் (Operating System), நாம் உபயோகிக்கும் உலவி(Browser) போன்ற விவரங்களும் வருகின்றன. மற்றும் இந்த தளத்தில் கூடுதல் வசதியாக நம் இணைய வேகத்தையும் அறிந்து கொள்ளலாம்.

7) IP address location
இந்த தளத்திலும் நம் கணினியின் ஐபி எண்ணை கண்டறியலாம்.

8) Find IP Address
இந்த தளத்தில் நமது ஐபி எண்ணும் மற்றும் அதனோடு நாம் உபயோகிக்கும் கணினியின் இயங்கு தளம் (Operating System), நாம் உபயோகிக்கும் உலவி(Browser) போன்ற விவரங்களும் வருகின்றன. மற்றும் இந்த தளத்தில் கூடுதல் வசதியாக நம் இணைய வேகத்தையும் அறிந்து கொள்ளலாம். இன்னும் சில விவரங்களும் இதில் கிடைக்கிறது. 

இந்த தளத்தில் நம் ஐபி எண்ணோடு கூடுதல் வசதியாக நம் ஐபி எண்ணை மறைத்து இணையத்தில் உலவும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

10) Check IP
இந்த தளத்திலும் நம் ஐபி எண்ணும் அதன் இருப்பிடத்தை கூகுள் வரைபடம் கொண்டும் காட்டியுள்ளனர். 

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

விளம்பர 'S.M.S' களை மொபைலில் தவிர்ப்பது எப்படி?


ண்பர் சுரேஷ்பாபு அவர்கள்நான் எனது மொபைலுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ் களை நிறுத்தும் DO NOT DISTRUB சேவையில் ரெஜிஸ்டர் செய்துள்ளேன், ஆனாலும் எனக்கு தொடர்ந்து தேவையில்லாத 'SMS 'கள் வந்து கொண்டிருக்கின்றன. இதை எப்படி நிறுத்துவது?’ என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார். இதற்கான பதில் மற்றவர்களுக்கும் மிகவும் பயனளிக்கும் என்பதால் பதிலும் மிக நீளமாக இருக்கும் என்பதால் என்னுடைய பதிலை ஒரு தனி பதிவாக இங்கே தருகிறேன்.

இந்தியாவைப் பொருத்தவரை இந்த நாட்டை ஆட்சி செய்வது அரசியல்வாதிகளாக இருந்தாலும் வழி நடத்தி செல்வது என்னவோ பெரியபெரிய தொழிலதிபர்கள் தான்.அவர்கள் கட்டும் அதிகப்படியான வரிப்பணத்தில் தான் அரசியல்வாதிகளுக்கு அரசாங்கத்தை நடத்திச் செல்ல வேண்டிய சூழ்நிலை. அதனால் தான் என்னவோ ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒரு அமைச்சரைக் கூட ஜெயிலுக்குள் போட்டவர்கள் அந்த ஊழலில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் அனில்அம்பானியை ஒன்றும் செய்யவில்லை. கை வைத்தால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இப்படிப்பட்ட அரசாங்கத்தில் உள்ள ட்ராய் அமைப்பும்,அது போடும் சட்டதிட்டங்களையும் யார் மதித்து பின்பற்றுவார்கள் சொல்லுங்கள்.ட்ராய் என்ற தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தை ஒரு வீணாய்ப்போன அமைப்பாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த அமைப்பு வாடிக்கையாளர்களிடம் இப்படித்தான் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்என்று மொபைல் சேவை தரும் நிறுவனங்களுக்கு பல சட்ட திட்டங்கள் போட்டாலும் எந்த மொபைல் சேவை நிறுவனங்களும் அந்த சட்ட திட்டங்களை துளியளவும் மதிப்பதில்லை.

இந்த நாட்டின் சட்டங்கள் எல்லாமும் சாதாரண மக்களும் மட்டும்தான் போலும்,அரசியல்வாதி களுக்கும்,பெரிய பெரிய பணக்காரர்களுக்கும் இல்லைபோலும்.இருந்தாலும் முறைப்படி என்ன செய்ய வேண்டும் என்பதை நான் இங்கே கூறுகிறேன்.இதை பின்பற்றுங்கள் போதும்.இதிலேயும் பிரச்சனை தீரவில்லை என்றால் நீங்கள் நீதிமன்றத்தை (consumar court) நாடுங்கள்அதுதான் சிறந்த வழியாக இருக்கும்.

உங்கள் மொபைலில் இருந்து START DND அல்லது பிரிவு வாரியாக தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் START 0 என்று எஸ்.எம்.எஸ்  டைப் செய்து 1909 என்ற எண்ணிற்கு அனுப்பினால் உங்களுக்கு வரும் தேவையில்லாத விளம்பர அழைப்புகளும்,எஸ்.எம்.எஸ் களும் 45 நாட்களுக்குள்  நிறுத்தப்படும். நீங்கள் எந்த நிறுவனத்தின் மொபைல் சேவையையும் பயன்படுத்தினாலும் மொபைலுக்கு வரும் தேவையில்லாத ிளம்பர அழைப்புகளையும் எஸ்.எம்.எஸ் களையும் தவிர்க்க ட்ராய் அமைப்பு கொடுத்திருக்கும் பொதுவான நம்பர் இதுதான்.
நீங்கள் வோடபோன் மொபைல் சேவையை பயன்படுத்துபவர் என்றால் இந்த லிங்கில் சென்று ங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, உங்கள் மொபைல் எண் போன்றவை கொடுத்துவிட்டு FULL DND என்பதை டிக் செய்து அனுப்பினால் தேவையில்லாத அழைப்புகள் எஸ்.எம்.எஸ் நிறுத்தப்படும்
இதேபோல மற்ற மொபைல் சேவை தரும் நிறுவனங்களின் DND பகுதிக்கு செல்ல கீழே பாருங்கள்.

# Airtel postpaid and prepaid      -  Click this Link
# Airtel landline               Click this Link
# BSNL Mobile               Click this Link

# Aircel                     Click this Link
# Loop mobile          -       Click this link

# Stel                 -       Click this link

# TATA Indicom         -        Click this Link

# TATA Docomo        -       Click this link
# Idea Cellular              Click this Link

# MTS                -       Click this link
# MTNL Delhi                Click this Link
# MTNL Mumbai        -       Click this Link
# Relaince GSM             Click this Link  
# Reliance CDMA       -       Click this link 
# Videoncon mobile     -       Clik this link

# Uninor              -       Click this link

# Virgin mobile         -      Click this link

மேற்கண்ட மொபைல் சேவை நிறுவனங்கள் பிரச்சனையை சரிசெய்யவில்லை என்றால் கீழே உள்ள ட்ராய் அமைப்பின் இணையதளத்துக்கு சென்று நீங்கள் புகார் செய்யுங்கள்.

MOBILE க்கான FREE SMS APPLICATIONகள்!



நாம் மொபைல் போன் உபயோகிக்க ஆரம்பித்த காலம் தொட்டு போனில் பேசுவதை விட எஸ்.எம்.எஸ் அனுப்புவதைத் தான் பெரிதும் விரும்புகிறோம்.

'மௌனத்தை விட இந்த உலகில் மிகச் சிறந்த மொழி வேறேதும் இல்லை' என்று சொல்வார்கள்.இது எஸ்.எம்.எஸ் க்கு மிகவும் அழகாக பொருந்திப் போகிறது.காரணம் நாம் மொபைலில் பேசித் தீர்க்க முடியாத சில விஷயங்களை எஸ்.எம்.எஸ் மூலமாக பேசி தீர்த்து விடுவோம்.

எஸ்.எம்.எஸ் கூட நாம் மற்றவர்களிடம் மௌனமாய் பேசுவதைப் போல ஒரு மொழி தான். அப்படிப்பட்ட எஸ்.எம்.எஸ் சேவைக்கு மொபைல்சேவை தரும் நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ்,ஒருநாளைக்கு நூறு எஸ்.எம்.எஸ் இலவசம்,ஒரு பைசாவுக்கு எஸ்.எம்.எஸ் என்று பல சலுகைகளை வழங்கி வருகிறார்கள்.

இதை சலுகைகள் என்று சொல்வதை விட மறைமுகக் கொள்ளை என்று தான் சொல்ல வேண்டும்.காரணம் மொபைல்சேவை தரும் நிறுவனங்கள் லாபம் இல்லாமல் எந்த சலுகைகளையும் நமக்கு தர மாட்டார்கள். 

அதனால் மொபைலும் உபயோகிக்க வேண்டும்.அதேநேரம் நமது மொபைலில் இருந்தே இலவசமாக மற்றவர்களுக்கு 'எஸ்.எம்.எஸ்'சும் அனுப்ப வேண்டும் இதற்கு சில நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ் சேவையுடன் கூடவே மொபைலுக்கான அப்ளிகேஷன்களையும் நமக்கு தருகின்றன.


அவைகளை இங்கே உங்களுக்காக தொகுத்து தருகிறேன்.


பெரும்பாலானவர்களால் உபயோகிக்கப்படும் முதல் இடத்தில் இருக்கும் இலவச எஸ்.எம்.எஸ் இணையதளம் இதுதான். இந்த இணையதளத்தில் இந்தியா மட்டுமல்லாது குவைத், சிங்கப்பூர், மலேசியா,யு.ஏ.இ என வெளிநாடுகளில் உள்ள மொபைல்களுக்கும் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.

இந்த இணையதளம் மொபைலுக்காகவே பிரத்யேகமாக தரும் அப்ளிகேஷனை நமது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டால் கணினி இல்லாமலேயே நமது மொபைலிலிருந்தே மற்றவர்களுக்கு இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம்.இது ஜாவா வகையை சார்ந்த அப்ளிகேஷன் என்பதால் நோக்கியா,சாம்சங்,சோனிஎரிக்சன்,எல்.ஜி,மோட்டோரோலா என பெரும்பாலான கம்பெனிகளின் மொபைல்களுக்கு இந்த அப்ளிகேஷன் சப்போர்ட் செய்கிறது.பிளாக்பெர்ரி,ஐ-போன்,ஆன்ட்ராய்டு ஆகிய ஒ.எஸ் கொண்ட மொபைல்களுக்கும் அதன் மார்க்கெட்டுகளில் தனி அப்ளிகேஷனாக கிடைக்கிறது.

இந்த அப்ளிகேஷன் நமது மொபைலின் போன்புக்கில் உள்ள நம்பர்களை தானாகவே இணைத்துக் கொள்வதால் நாம் எஸ்.எம்.எஸ் அனுப்புவது இன்னும் எளிமையாகிறது.இதன் ஒரேகுறை 80  எழுத்துகளில் மட்டுமே எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.

அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.


இந்த இணையதளமும் கணினி மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்களின் பேவரைட் இணையதளம்.கணினி மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்ப தினமும் 26 லட்சம் பேர்கள் இந்த தளத்தை பயன்படுத்துகிறார்கள்.160 எழுத்துகள் வரை நாம் எஸ்.எம்.எஸ் டைப் செய்து அனுப்ப முடியும்.

மொபைலுக்கான பிரத்யேகமான அப்ளிகேஷனை இவர்கள் இன்னும் தரவில்லை என்றாலும் நமது மொபைலின் பிரௌசரில் http://m.way2sms.com என்று டைப் செய்து இந்த இணையதளம் மூலம் நாம் மற்றவர்களுக்கு அளவற்ற இலவச எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.இங்கு வெளிநாடுகளுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி இல்லை.கூடுதல் சேவையாக நமது இமெயில்களை மொபைலில் படித்துக் கொள்ளும் வசதியையும் தருகிறார்கள்.

http://www.jaxtr.com              

120 எழுத்துகளை மட்டுமே டைப் செய்து மற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ள முடியும்.மூன்று கட்டண திட்டங்கள் உண்டு அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்தால் குறைந்த கால்கட்டணங்களில் வெளிநாடுகளுக்கு பேசிக்கொள்ளவும்,இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளவும் முடியும்.இதில் இருக்கும் free connect மூலம் இலவசமாக பேசிக்கொள்ளலாம்.
பிளாக்பெர்ரி,ஐ-போன்,ஆன்ட்ராய்டு ஆகிய ஒ.எஸ் மொபைல்களுக்கு பிரத்யேகமாக அப்ளிகேஷனும் உண்டு.


way2sms இணையதளம் போல் உள்ளது. இந்தியாவுக்குள் எந்த மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.தனியாக மொபைலில் பயன்படுத்த அப்ளிகேஷன் இல்லை.


300 எழுத்துகள் வரை சப்போர்ட் செய்கிறது.மொபைலில் பயன்படுத்த தனி அப்ளிகேஷன் இல்லை.


மிக நீளமான எஸ்.எம்.எஸ் அனுப்ப உதவும் இணையதளம் இதுதான்.இணையதளத்தின் பெயரைப் போலவே கிட்டத்தட்ட 440 எழுத்துகளை டைப் செய்து அனுப்பலாம்.மொபைலுக்கான தனி அப்ளிகேஷன் இல்லை.

http://m.ibibo.com முகவரி மூலம் உங்கள் மொபைலில் இலவச எஸ்.எம்.எஸ் சேவையை பயன்படுத்தலாம். மெயில்,போட்டோஸ்,மியூசிக்,கேம்ஸ் என பல சேவைகள் இதில் உண்டு.


மொபைலுக்கான பிரத்யேகமான எஸ்.எம்.எஸ் அப்ளிகேஷன் இது. ஜாவா வகை என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போன்களை இது ஆதரிக்கிறது.இலவச எஸ்.எம்.எஸ் சேவையுடன் இன்ஸ்டன்ட் மெசஞ்ஜர்,கேமிங் போர்டல் என இதர சேவைகளும் உண்டு.

அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.


இந்த அப்ளிகேஷனை மொபைலில் பயன்படுத்தும் அத்தனை பேர்களுக்கும் நீங்கள் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொள்ளலாம்.பிளாக்பெர்ரி,ஐ-போன்,ஆன்ட்ராய்டு,சிம்பியன்,ஜாவா,விண்டோஸ் ஒ.எஸ் என எல்லாவகை ஒ.எஸ் மொபைல்களுக்கும் தனி அப்ளிகேஷனாக பயன்படுத்தலாம். இலவசம் என்று சொன்னாலும் சேவையை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கிறார்கள்.


அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.